Saturday, 1 September 2018

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்கு கடல், ஏரியாக காட்சியளிப்பதில் ஆச்சரியமில்லை.

சோழர்கள் தமிழர் ஏரி (வங்காள விரிகுடா) முழுதும் தமது நாவாய்களை இருத்தியிருந்தனர்.

சோழ கடற்படை பல நிலைகளை கொண்டது.

முதல் நிலை - கண்ணி.
இந்த கப்பல் படை சிறிய அளவிலான வேகமாக செல்லக்கூடிய கப்பல்களை கொண்டது. இவர்கள் எதிரி நிலைகளுக்கு சென்று, அவர்களை சீண்டிவிட்டு வேகமாக ஓரிடத்தில் நின்று விடுவர். பின்னால் துரத்தி வரும் எதிரிப்படை, சோழர் படை வைக்கும் கண்ணியில் சிக்கி சிண்ணாப்பின்னமாகும்.

அடுத்த முதல் நிலை - தளம்
இவர்களும் சிறிய அளவிலான படை தான். ஆனால், கண்ணியை போல் அல்லாமல் அடித்து நொருக்குவார்கள். எளிமையாக தலைவரின் கரும்புலிகளை போல..

இடைநிலை - மண்டலம்.
இதில் 40-50 கப்பல்கள் இருக்கும். இவர்கள் கட்டளை தளபதியின் கட்டளையை பொருத்து பலவாறு நிலையெடுப்பார்கள் (Formations). சில சமயம் தனியாகவும், சில சமயம் கூட்டமாகவும் செல்வர். இவர்கள் மரபுவழி கடற்போர் புரிவார்கள்.

அடுத்த இடைநிலை - கணம்.
மூன்று மண்டலங்களை கொண்டது கணம். அப்படியென்றால், 3×50=150 போர் கப்பல்களை கொண்டது.

அடுத்தது கடைநிலை - அணி.
மூன்று கணங்களை கொண்டது, அணி. அப்படியென்றால், 150×3=450 கப்பல்களை கொண்டது.

இறுதியில், நாவாய் கட்டளை நாயகர் படை. அதை "அதிபதி" என்று குறிப்பிடுவார்கள். அனைத்து கட்டளைகளும் அதிபதியிடமிருந்தே பிற நிலைகளுக்கு செல்லும். பிற நிலைகள் இருப்பை அதிபதிக்கு செய்தி அனுப்பி கொண்டே இருக்கும். செய்தி அனுப்பும் அதிவேக படகுகள் தனியாக உண்டு.

பொதுவாக அதிபதியாக கடற்போர் பயிற்சி பெற்ற சோழ இளவரசர்களே, அல்லது சோழர்களின் கீழ் உள்ள சிற்றரசர்களோ தான் இருப்பார்கள்.

இன்றைய நிலையில் பெரும்பாலான நாடுகளுக்கே இத்தகைய கடற்படை
இல்லை. ஆனால், 1000 வருடத்திற்கு முன்னால் சோழன் கடற்படை இப்படியானதாக இருந்தது.

சோழர்களின் தேவரடியார்கள்

இராஜராஜ சோழன் காலத்தில் "தேவடிடியார்கள்" எனச் சொல்லப்பட்டவர்கள் இருந்தனர்.அவர்களும் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்த "தேவதாசிகளும்" ஒன்றல்ல...

சோழர்கள்  காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று கோயில்களில் தொண்டு புரிந்தார்கள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டார்கள். #தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பது அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர்கள் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

செப்பேடுகள்

#திருவாலங்காட்டுச் செப்பேடுகள்...

#இராசராச சோழனின் மகன் இராசேந்திர சோழன் கி.பி.1022 ம் ஆண்டில் தானம் வழங்கிய நிலங்களைப் பற்றி இச் செப்பேடுகள் (மொத்தம் 31) கூறுகின்றன...

#பார்ப்பணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டிருந்த பழையனூர் கிராமம் பிரிக்கப்பட்டு திருவாலங்காட்டு கோயிலுக்கு தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதன் பின்னர் பூரண வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது... அதுவரை பார்ப்பனர்களிடமிருந்த அந்த நிலம் அதன் பிறகு உழுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்தச் செப்பேட்டின் ஆணை தெரிவிக்கிறது.

#சோழர்கள் ஆட்சியில் உழுபவர்கள் நிலம் பறிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டது என்று நிலவிவரும் கருத்தை உடைத்து இதுபோன்ற பல நிலப் பரிமாற்றங்கள் சமூகத்தில் பல பிரிவினரிடையே நடந்தது வழக்கமான ஒன்று தான். நிலம் தானம் வழங்கப்பட்டதில் வர்ணாசிரம உயர்வு தாழ்வு ஏதுமில்லை என்பதை அச்செப்பேடுகள் தெளிவாக்குகின்றன.
________________________________________________

#பார்ப்#பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்தாரா?

#இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாய் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக வழங்கினான...அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல... சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர்,கணி,காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்கள் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில் இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது…
#எடுத்துக்காட்டாக சில….

“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”

“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”

“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”

“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”

“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”

“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”

என்று கூறப்பட்டுள்ளது….

#மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்….யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை...

#பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு... அவற்றின் உரிமையாளர் அரசு தான்.

#மேற் கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை…

#முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும், இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும், மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்... நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது... அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்….

“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்” என்று கூறுகிறது.

#ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது…

ஆதாரம் :--

”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” சி.கோவிந்தராசன்,சி.கோ.தெய்வநாயகம்…
--பதிப்புத்துறை--மதுரை காமராசர் பல்கலைக்கழகம்….

அப்பப்பா எம்பூட்டுப் பொய்யி!!!!

#திராவிடப் பொய்களை உடைப்போம். இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர்... மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர்..

#அவர்களுக்கான பதில்….

#இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாய் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக வழங்கினான...அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல... சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர்,கணி,காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்கள் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில் இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது…
#எடுத்துக்காட்டாக சில….

“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”

“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”

“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”

“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”

“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”

“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”

என்று கூறப்பட்டுள்ளது….

#மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்….யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை...

#பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு... அவற்றின் உரிமையாளர் அரசு தான்.

#மேற் கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை…

#முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும், இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும், மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்... நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது... அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்….

“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்” என்று கூறுகிறது.

#ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது…

ஆதாரம் :--

”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” சி.கோவிந்தராசன்,சி.கோ.தெய்வநாயகம்…
--பதிப்புத்துறை--மதுரை காமராசர் பல்கலைக்கழகம்….

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...