Tuesday, 21 August 2018

மங்களம் எனும் சொல் தமிழே

#மங்கலம்-மங்களம்.. சமஸ்கிருதமா???

#ஆரிய கருத்தியலாளர்கள் பலரும் இச்சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென கூறுகின்றனர்...#வழக்கம் போல திராவிட கருத்தியலாளர்களும் ஆமாம்  ஆமாம் மங்கலம் என்பது சமஸ்கிருதச் சொல்தான் எனவே மங்கல நிகழ்வுகளை புறக்கணிக்க வேண்டும் என்றனர்....#அறிஞர் மா.சோ.விக்டர் என்பவர் "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்" எனும் தனது நூலில் இந்த சொல்லின் மூலமானது தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்...

#தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம்=மங்கலம் என்றும் பின்பு மங்களம் என்றும் ஆனதென கூறுகிறார்.

#மங்கலம் என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே மங்கலம் மங்களம் போன்ற சொற்களின் தாய் தமிழே…

#புகுந்த வீட்டிற்குள் முதன்முதலில் வரும் மருமகள் மண் கலத்தில் (குடத்தில்) தண்ணீரோடு நுழைவது இன்றும் மரபாக உள்ளது(என்ன ஒரு வேறுபாடு இப்பொழுது சில்வர் குடம்)...#புதுமணை புகுவிழாவிலும் முதலில் கொண்டு செல்வது நீர் நிறைந்த மண் கலத்தை தான்... #இறுதிச் சடங்கிலும் கூட மண்கலத்தை(பானை) அருவாளால் கொத்தி உடைப்பது தமிழர் மரபாகும்.. #அதாவது அமங்கல நிகழ்வு (அமண் கலம்)..#உடலை மண் கலத்திற்கு உவமையாகக் கூறுவது தமிழ் மரபு…”#நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒருத் தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி” என்று மனித உடலை மண் கலம் (மண் பானை) என்கிறார் பட்டினத்தார்…
“#மண்ணென்று கண்டீர் இருவினைப் பாத்திரந் திண்ணென்றிருந்தது தீயினைச் சேர்ந்தது-விண்ணின்று நீர் விழின் மீண்டுமண் ணாவைப்போல் எண்ணின்ற மாந்த இருக்கின்ற வாறே”(திருமந்திரம் 143) என்று திருமூலர் மனித உடலின் நிலையாமை குறித்துப் பாடுகையில் மனித உடலை மண் கலம் என்கிறார்...

#ஆக மண்+கலம் என்பதே மங்கலம், மங்களம்...

No comments:

Post a Comment

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...